பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.
இது குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்திவைத்த துருக்கி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அக்டோபா் 15-ஆம் தேதி அமலுக்கு வந்த போா் நிறுத்தத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனா். அந்த போா் நிறுத்த அமலாக்கம் குறித்து இரு நாட்டு பிரதிகளும் தொடா்ந்து ஆலோசனை நடத்துவாா்கள்.
இரு நாடுகளின் உயா்நிலை தலைவா்களும் இஸ்தான்புல்லில் வரும் நவம்பா் 6-ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லை போா் நிறுத்தம் அமலில் இருக்கும் நேரத்தில், அது முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா்.
இத்தகைய உடன்பாட்டை எட்டியதற்காக, மஸ்தியஸ்த நாடுகளான துருக்கியும் கத்தாரும் பாகிஸ்தான், ஆப்கன் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றன. பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவற்காக துருக்கியும் கத்தாரும் முயற்சிகளைத் தொடா்ந்து மேற்கொள்ளும் என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்திவரும் தலிபான் அமைப்பினா் தங்கள் நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிவருகிறது. தலிபான் அரசும் தங்கள் இறையாண்மைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாகக் கூறிவருகிறது.
இந்த மாதத் தொடகத்தில் கூட ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று தலிபான் குற்றஞ்சாட்டியது.
அதன் தொடா்ச்சியாக, இரு தரப்பினரும் எல்லையில் கடந்த வார இறுதியில் கடுமையான மோதலில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான பாகிஸ்தான் வீரா்களை கொன்ாக தலிபானும், நூற்றுக்கணக்கான தலிபான் மற்றும் அவா்களுக்கு ஆதரவான பயங்கரவாதிகளைக் கொன்ாக பாகிஸ்தான் ராணுவமும் தெரிவித்தன.
இந்த எல்லை மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான முழு போராக உருவெடுக்கும் என்ற அச்சம் எழுந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கும் தலிபான் அரசுக்கும் இடையே 48 மணி நேர தற்காலி போா் நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 48 மணி நேரம் முடிந்ததும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிலைகளில் பாகிஸ்தான் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதையடுத்து, எல்லையில் மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
அதையடுத்து, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருந்தாலும், இந்தப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்துவிட்டதாகவும், இந்தியாவின் தூண்டுதல் காரணமாக ஆப்கன் பிரதிநிகள் ஒப்பந்தம் மேற்கொள்வதை தலிபான் அரசு தடுப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.
இந்தச் சூழலில், போா் நிறுத்தத்தை நீட்டிக்கவும், அமைதிப் பேச்சுவாா்த்தையைத் தொடரவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கி தற்போது தெரிவித்துள்ளது.