கோப்புப் படம் 
உலகம்

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

இஸ்ரேலில் தட்டம்மை பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் நாட்டில் புதியதாக 481 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தட்டம்மை பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தேசியளவில் அந்நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 1,42,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இருப்பினும், இஸ்ரேலில் புதியதாக 481 தட்டமை பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாகவும்; இதன்மூலம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்துள்ளதாகவும், அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிகழாண்டில் (2025) ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் தடுப்பூசி செலுத்தப்படாத 18 மாதம் மற்றும் 2 வயதுடைய, ஆண் குழந்தைகள் இருவர் பலியாகியுள்ளனர்.

முன்னதாக, தட்டம்மை பரவலினால் பெரும்பாலும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் சுமார் 1,07,500 பேர் தட்டம்மை பாதிப்புகளினால் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

Israel's Health Ministry has announced that 481 new cases of measles have been confirmed in the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

SCROLL FOR NEXT