ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 4 பேர் பலி
ரஷியா மீது உக்ரைன் நிகழ்த்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
ரஷியா மீது உக்ரைன் நிகழ்த்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
ரஷியாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் 4 பேர் பலியானதாக சமாரா ஆளுநர் சனிக்கிழமை தெரிவித்தார். அதே நேரத்தில் ரஷியா, இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வீசியதாகவும், அதில் மூன்று பேர் பலியானதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
இதுகுறித்து சமாரா ஆளுநர் வியாசெஸ்லாவ் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், நேற்று இரவு எதிரி ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் பலியானதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
மேலும் ஒருவர் காயமடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாதே சாகேப் பால்கே விருது! மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ரஷியா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒன்றாகும்.
நாடு முழுவதும் இரவு நேரத் தாக்குதல்களில் மூன்று பேர் பலியானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் பகுதியில் இருந்து ஒரே இரவில் செலுத்தப்பட்ட 149 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது அல்லது இடைமறித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
A Ukrainian drone attack on Russia's southwestern Samara region killed four people, the local governor said Saturday while Ukraine said Russia had fired hundreds of drones during the night and three people had died.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.