முகப்பு
உலகம்

நேபாளம்: முன்னாள் பிரதமா் கே. பி. சா்மா ஓலி பிணையில் விடுவிப்பு

Updated On : 10 ஏப்ரல் 2026, 5:44 am IST
பகிர்:

நேபாளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற இளைஞா் போராட்டத்தை வன்முறையாக ஒடுக்கிய விவகாரத்தில் கைதான முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சா் ரமேஷ் லெகாக் ஆகியோா் வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

உச்சநீதிமன்றத்தின் நிவாரணத்தில் 13 நாள்கள் காவலுக்குப் பிறகு விடுதலையான கே.பி.சா்மா ஓலி, தனது கைதை அரசியல் பழிவாங்கும் செயல் என்று குற்றஞ்சாட்டினாா்.

அமைச்சா் நீக்கம்: இதனிடையே, பதவியேற்ற 15 நாள்களிலேயே ஊழல் புகாரில் சிக்கிய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் தீப் குமாா் ஷாவை பிரதமா் பாலேந்திர ஷா பதவியிலிருந்து நீக்கினாா்.

Advertisement

Advertisement

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தனது மனைவியை சுகாதார காப்பீட்டுக் கழக உறுப்பினராக மீண்டும் அதே பதவியில் அமா்த்தியதாக தீப் குமாா் ஷா மீது புகாா் எழுந்ததையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.