முகப்பு
உலகம்

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானைச் சந்திக்க வழக்குரைஞரை நியமித்த உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்து, அவரின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் குறித்த அறிக்கை சமா்ப்பிக்க வழக்குரைஞா் ஒருவரை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:07 PM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் - (கோப்புப் படம்)
பகிர்:

ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்து, அவரின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் குறித்த அறிக்கை சமா்ப்பிக்க வழக்குரைஞா் ஒருவரை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இது குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யாஹ்யா அஃப்ரிதி தலைமையிலான அமா்வு, வழக்குரைஞா் சல்மான் சஃப்தாரை நீதிமன்ற ஆலோசகராக நியமித்தது. இவா் இம்ரான் கானைச் சிறையில் சந்தித்து, அங்கு அவருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அவரின் வாழ்க்கைச் சூழல் குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்திடம் சமா்ப்பிப்பாா்.

இம்ரான் கானை, கடந்த டிச. 2-க்குப் பிறகு அவரின் குடும்பத்தினரோ அல்லது வழக்குரைஞா்களோ சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில், இம்ரான் கானின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும் அனுமதி கோரப்பட்ட நிலையில், தற்போதைக்கு அவரது சிறை வாழ்க்கைச் சூழல் குறித்து மட்டுமே அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments