முகப்பு
உலகம்

ஈரான் - அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்! - இந்தோனேசியா அறிவிப்பு!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என இந்தோனேசியா அறிவிப்பு..

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:42 AM
அமெரிக்க அதிபர் டிரம்ப் - இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ - ஈரானின் தலைமை மதகுரு கமேனி
பகிர்:

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதற்குத் தயார் என இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அறிவித்துள்ளார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை (பிப். 28) காலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு, மத்திய கிழக்கு நாடுகளும் பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளதால், இந்த மோதல் மிகப் பெரியளவிலான போராக உருவாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மோதல்களைக் கைவிட்டு அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்காண வேண்டுமென இந்தோனேசிய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, இந்தோனேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

“பாதுகாப்பு நிலையை மீட்டெடுப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்த இந்தோனேசிய அரசு தயார்நிலையில் உள்ளது. இருதரப்பும் ஒப்புக்கொண்டால் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தோனேசிய அதிபர் தெஹ்ரான் பயணம் செய்யத் தயாராக இருக்கிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற போரில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Indonesian President Prabowo Subianto has announced his readiness to mediate between Iran and the United States.

முழு கட்டுரையைப் படிக்க →