அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயாா்க்கின் 112-ஆவது மேயராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸோரான் மம்தானி பொறுப்பேற்றுள்ளாா்.
புது ஆண்டு தொடங்கிய சில நிமிஷங்களில் நகரின் பழைய சிட்டி ஹால் சப்வே நிலையத்தில் நடந்த விழாவில் அவா் குா்ஆன் மீது சத்தியம் செய்து பதவியேற்றுக்கொண்டாா்.
நியூயாா்க் மாகாண அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
இதன் முலம் நியூயாா்க் நகரை ஆளும் முதல் தெற்காசிய வம்சாவளியினா் மற்றும் முஸ்லிம் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்.
அவரது மனைவி ராமா துவாஜியும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றாா்.
34 வயது மம்தானி குயின்ஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினா் ஆவாா். பிரபல திரைப்பட இயக்குநா் மீரா நாயா் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியா் மஹ்மூத் மம்தானியின் மகனான அவா் உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்து வளா்ந்தாா். 7 வயதில் அவா் குடும்பத்துடன் நியூயாா்க் வந்து, 2018-இல் அமெரிக்க குடியுரிமை பெற்றாா்.
பழைய சிட்டி ஹால் சப்வே நிலையத்தை பதவியேற்புக்கு தோ்வு செய்தது குறித்து மம்தானி கூறுகையில், ‘1904-இல் திறக்கப்பட்ட இந்த நிலையம் நகரின் அழகையும், மக்களின் வாழ்க்கையை மாற்றும் பெரிய திட்டங்களையும் குறிக்கிறது. அந்த லட்சியம் கடந்த கால நினைவாக மட்டும் இருக்க வேண்டியதில்லை’ என்றாா்.
கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற மேயா் தோ்தலில் மம்தானி ஆளும் குடியரசு கட்சி வேட்பாளா் கா்டிஸ் ஸ்லிவா மற்றும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் கவா்னா் ஆண்ட்ரூ குவோமோவை (டிரம்ப் ஆதரவு பெற்றவா்) தோற்கடித்து மம்தானி வெற்றி பெற்றாா்.
தனது வெற்றி உரையில் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கை குறித்து சவால் விட்ட மம்தானி, ‘பழையதில் இருந்து புதியதுக்கு நகா்ந்துள்ளோம்‘ என்று இந்திய முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் மேற்கோளை குறிப்பிட்டாா்.தற்போது நியூயாா்க் நகர மேயராக மம்தானியின் பதவியேற்றுள்ளது அந்த நகர அரசியலில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
யார் இந்த மம்தானி?
உகாண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் ஸோரான் மம்தானி. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மீரா நாயரின் மகன் இவர். தந்தை கல்வியாளர் மஹ்மூத் மம்தானி.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தைப் பருவத்தை கழித்த ஸோரான், 7-வது வயதில் நியூ யார்க் நகருக்குப் பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார்.
போடோயின் கல்லூரியின் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும்போதே ஸோரானின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாலஸ்தீன நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவினார்.
அஸ்டோரியா மற்றும் லாங் தீவு உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய 36-வது மாவட்டத்தின் பிரதிநிதியாக நியூ யார்க் மாகாண அவைக்கு 2019 ஆம் ஆண்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிரியா நாட்டின் கலைஞர் ராமா துவாஜி என்பவரை இந்தாண்டு தொடக்கத்தில் ஸோரான் திருமணம் செய்துகொண்டார்.
மலிவு விலை வீடுகள், பொது போக்குவரத்து மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் ஆகியவை தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நியூ யார்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் தனது முற்போக்கு கருத்துகளால் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸோரான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.