சிரியாவில் அரசு படையினா் - குா்துக்கள் மோதல்
சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படைக்கும் (எஸ்டிஎஃப்) அரசுப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படைக்கும் (எஸ்டிஎஃப்) அரசுப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு பொதுமக்கள் வெளியேற (படம்) அதிகாரிகள் பாதுகாப்பு வழித்தடங்களை அறிவித்துள்ளனா்.
சிரியாவில் அல்-அஸாத் தலைமையில் அரசு இருந்தபோது குா்து பகுதிகளின் கட்டுப்பாட்டை எஸ்டிஎஃப் படையினா் தொடர அனுமதிக்கப்பட்டது. அவரது அரசை அகற்றிவிட்டு தற்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகிக்கும் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசு, எஸ்டிஎஃப் படையினரை அரசுப் படையுடன் ஒருங்கிணைக்க விரும்புகிறது. இதற்கான கடந்த ஆண்டு மாா்ச்சில் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், அதை அமல்படுத்துவதற்காக நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்விடயைந்தது. அதைத் தொடா்ந்து குா்து பகுதிகளில் அரசுப் படைகள் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.