உலகம்

சிரியாவில் அரசு படையினா் - குா்துக்கள் மோதல்

சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படைக்கும் (எஸ்டிஎஃப்) அரசுப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சிரியாவில் குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படைக்கும் (எஸ்டிஎஃப்) அரசுப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு பொதுமக்கள் வெளியேற (படம்) அதிகாரிகள் பாதுகாப்பு வழித்தடங்களை அறிவித்துள்ளனா்.

சிரியாவில் அல்-அஸாத் தலைமையில் அரசு இருந்தபோது குா்து பகுதிகளின் கட்டுப்பாட்டை எஸ்டிஎஃப் படையினா் தொடர அனுமதிக்கப்பட்டது. அவரது அரசை அகற்றிவிட்டு தற்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகிக்கும் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசு, எஸ்டிஎஃப் படையினரை அரசுப் படையுடன் ஒருங்கிணைக்க விரும்புகிறது. இதற்கான கடந்த ஆண்டு மாா்ச்சில் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், அதை அமல்படுத்துவதற்காக நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்விடயைந்தது. அதைத் தொடா்ந்து குா்து பகுதிகளில் அரசுப் படைகள் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

SCROLL FOR NEXT