கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாந்த்ரீக  சக்தி பெறுவதற்காக மாமியாரைக் கொன்று ரத்தம் குடித்த மருமகன் 

அபூர்வ மாந்த்ரீக  சக்தி பெறுவதற்காக மாமியாரைக் கொன்று ரத்தம் குடித்த மருமகனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

News image
Updated On :26 டிசம்பர் 2018, 3:39 pm

ராஞ்சி: அபூர்வ மாந்த்ரீக  சக்தி பெறுவதற்காக மாமியாரைக் கொன்று ரத்தம் குடித்த மருமகனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம்  ரங்கமடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிஹலிந்ரா லோரா.  தனது மாமியார் ஷகுரா தேவி (45)-யை  கடந்த இரு நாட்களுக்கு முன் கொடூரமாக கொலை செய்து விட்டு தலைமறைவானார். இதையடுத்து ஷகுராவின் கணவர்  பர்னா போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த லோராவை போலீசார் புதனன்று கைது செய்தனர்.

லோரா அப்போது போலீசாரிடம்  அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

நான் பில்லி, சூனியம், மாந்ரீகம் போன்ற விஷயங்களை பயிற்சி செய்து வந்தேன். எனக்கு இதில் அபூர்வ மாந்த்ரீக சக்திகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக என் மாமியாரை குத்திக் கொலை செய்தேன். பின்னர் அவரின் ரத்தத்தை குடித்தேன். 

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

இதையடுத்து போலீசார்  லோராவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல செவ்வாயன்று தெலுங்கானவில் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் மாந்த்ரீகம் செய்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பெற்ற தாயைக் கொன்ற மகன் ஒருவன் கைது செய்யப்பட்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.