முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்ட நீதிமன்றம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி காரில் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் மீது எதிரே வந்த டிரக் மோதியதில் 8 பேர் பலியாகினர்.
விபத்து என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பிறகுதான், இது திட்டமிட்ட சதி என்பதைக் கண்டறிந்தனர். ரௌடி விக்கி தியாகி, மற்றொரு ரௌடியான உதய் வீர் சிங்கை, குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட அவர்கள் வந்த கார் மீது டிரக்கை மோதச் செய்து கொன்றுள்ளது தெரிய வந்தது.
விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, நீதிமன்ற வளாகத்துக்குள் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் ரௌடி தியாகி, 2015ஆம் அண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
8 பேர் கொலை வழக்கில், ரௌடி தியாகியின் மனைவி மீனு உள்பட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



