தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தேசத்திற்கு சேவையாற்றுவது பெருமிதமாக உள்ளது: பிரதமர் மோடி

முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தேசத்துக்கு சேவையாற்றுவது பெருமிதம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2023, 6:29 pm IST


புதுதில்லி: முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தேசத்துக்கு சேவையாற்றுவது பெருமிதம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. 

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், விடியோக்கங்கள் மற்றும் தகவல்களை குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில்,  ‘இந்தியா ஃபா்ஸ்ட் 9 ஆண்டு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஊக்கம் குறையாத உறுதியுடன் முன்னோக்கி நடைபோடும் ஒரு தேசத்திற்கு சேவைசெய்வதில் பெருமிதம் கொள்கிறேன். பன்னாட்டு அமைப்புகள் முதல்  தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி முன்னேறிச் செல்வது நமது மக்களின் வலிமை மற்றும் உணர்வு ஊக்கத்துக்கு சான்றாக உள்ளது" என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.