தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

நாளுக்கு 7 மணிநேரம் உழைக்கும் இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்!

இந்திய ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 42 மணிநேரம் வேலை செய்வதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2025, 3:41 pm IST

இந்திய ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 42 மணிநேரம் வேலை செய்வதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் வேலை செய்வதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை கூறுகிறது. ஊழியர்கள், நாளுக்கு சராசரியாக 422 நிமிடங்கள்வரையில் (7 மணிநேரம்) வேலை செய்கின்றனர்.

வியட்நாம், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ் முதலான வளர்ந்து வரும் நாடுகளிலும் ஊழியர்கள் வாரத்துக்கு 33 முதல் 48 மணிநேரமே வேலை செய்கின்றனர். இருப்பினும், இவற்றில் சில நாடுகளில் வேலை நாள்கள் 5-ஆகக் குறைக்கப்பட்டு, வேலை நேரம் 8 மணிநேரம்வரையில் இருக்கும்.

இதனிடையே, நாடு முன்னேற வாரத்துக்கு 70 மணிநேரம்வரையில் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவன இணை நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதும், அமெரிக்காவைப்போல பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், சீனாவைப்போல வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் கூறியதும் இந்திய நிறுவனங்களின் பணியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.