மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஆபரேஷ ஜல் ரஹாத் -2 எனும் நடவடிக்கை இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து, பாதுகாப்புத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இன்று (ஜூன் 4) கூறுகையில், கடந்த மே 31 ஆம் தேதி முதல் மணிப்பூரின் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் இந்திய ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு நிலவும் மோசமான வானிலைகளுக்கு இடையில், சுமார் 2,500-க்கும் மேற்பட்டோரை ராணுவப் படையினர் மீட்டுள்ளனர். இதில், ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் சிக்கியிருந்த ஏராளமான நோயாளிகள் உள்பட 778 பேர் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அங்கு தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டதுடன், மீட்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாம் ஒன்றும் ராணுவப் படையினர் அமைத்துள்ளனர்.
கிழக்கு இம்பால் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சொயிபம் லெய்காய் கிராமத்தில், சுத்தமான குடிநீர் இல்லாமல் தவித்த கிராமவாசிகளுக்கு, தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு சுமார் 5,750 லிட்டர் குடிநீர் ராணுவ வீரர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், மீட்புப் படகுகள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருள்களுடன் ராணுவ வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாகவும்; அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் இணைந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசின் ஜல் ஜீவன்2.0 திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு : புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி உறுதி

யமுனையில் நீரோட்டத்தை மேம்படுத்த பாசனத் துறையின் இயந்திரங்களை பயன்படுத்தும் டிஜேபி!

வஜிராபாத் தடுப்பணையில் யமுனை நீா்மட்டம் குறைவு: தலைநகரில் தண்ணீா் பற்றாக்குறை தொடர வாய்ப்பு

தண்ணீப் கட்டணத்தை குறைக்க டிஜேபி கொள்கையில் தளா்த்தல்: ரேகா குப்தா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



