விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி?

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

ராஜ் தாக்கரே.

Updated On :9 மார்ச் 2025, 10:54 am

DIN

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

அதில் கங்கை நதியின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களைப் பார்த்தேன். சிலர் ஆற்றில் தங்கள் உடல்களை தேய்த்து குளிப்பதையும் பார்த்தேன்.

இந்தியாவில் உள்ள எந்த நதியும் தூய்மையாக இல்லை. தனது கட்சித் தலைவர் பாலா நந்த்கோன்கர் மகா கும்பமேளாவிலிருந்து புனித நீரைக் கொண்டு வந்ததார். ஆனால் அதைக் குடிக்க நான் மறுத்துவிட்டேன்.

'கங்கை விரைவில் தூய்மை செய்யப்படும்' என்ற கூற்றுகளை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்ததிலிருந்து கேள்விப்பட்டு வருகிறேன்.

தற்போது இந்த கட்டுக்கதையிலிருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.