பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி?

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

ராஜ் தாக்கரே.

Updated On :9 மார்ச் 2025, 4:24 pm IST

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

அதில் கங்கை நதியின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களைப் பார்த்தேன். சிலர் ஆற்றில் தங்கள் உடல்களை தேய்த்து குளிப்பதையும் பார்த்தேன்.

இந்தியாவில் உள்ள எந்த நதியும் தூய்மையாக இல்லை. தனது கட்சித் தலைவர் பாலா நந்த்கோன்கர் மகா கும்பமேளாவிலிருந்து புனித நீரைக் கொண்டு வந்ததார். ஆனால் அதைக் குடிக்க நான் மறுத்துவிட்டேன்.

'கங்கை விரைவில் தூய்மை செய்யப்படும்' என்ற கூற்றுகளை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்ததிலிருந்து கேள்விப்பட்டு வருகிறேன்.

தற்போது இந்த கட்டுக்கதையிலிருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.