உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்துள்ளது.
மும்பையில் ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நாள்களாக நடைபெற்ற ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் 6 போ் அடங்கிய குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்தது. எனவே, வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றில் மாற்றம் இருக்காது.
மேற்கு ஆசிய மோதல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போா் காரணமாக சர்வதேச அளிவில் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இது உலக பொருளாதாரத்துக்கு தொடர்ந்து பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த சூழலில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஆா்பிஐ முடிவு செய்துள்ளது. எனவே, இப்போது ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றம் செய்யாமல் 5.25 சதவீதமாக தொடரும். இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
2027 நிதியாண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்க கணிப்பை, முன்னர் மதிப்பிடப்பட்ட 5.1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
இதற்கு முன் ஜூலை மாதத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிகம்.
Summary
RBI has decided to keep the repo rate unchanged at 5.25 percent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிசா்வ் வங்கியில் புதிதாக செயல் இயக்குநா் நியமனம்

விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!

இந்திய குடும்பங்களில் அதிகரிக்கும் கடன்கள்: ரிசர்வ் வங்கி

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசா்வ் வங்கி
விடியோக்கள்

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் | CM Vijay | TVK | TN Budget 2026- 2027




