ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமெரிக்க துணை அதிபரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகை ரத்து!

அமெரிக்க துணை அதிபரின் ஜெய்ப்பூர் மாளிகையின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
ஜெய்ப்பூர் மாளிகை மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
Updated On :23 ஏப்ரல் 2025, 3:49 pm

DIN

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகையானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்.21 ஆம் தேதி இரவு ஜெய்ப்பூர் வந்தடைந்த அவர்கள் நேற்று (ஏப்.22) வரலாற்று சிறப்புமிக்க அமெர் கோட்டையைக்குச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (ஏப்.23) அவர்களை நேரில் சந்தித்து வரவேற்றார். பின்னர், ஆக்ராவிலுள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹாலை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக துணை அதிபர் வேன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றிப்பார்த்தனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகர மாளிகைக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களினால் அவர்களது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரையில் வழங்கப்படாத நிலையில் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலினால் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

தற்போது, ஜெய்ப்பூரின் ராம்பார்க் ஓட்டலில் தங்கியுள்ள துணை அதிபர் வேன்ஸின் குடும்பம் நாளை காலை 6.30 மணியளவில் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளனர்.

முன்னதாக, துணை அதிபர் வேன்ஸின் வருகை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இன்று ஜெய்ப்பூர் மாளிகை மக்கள் பார்வைக்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.