எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு ‘கான்க்ளேவ்’ படத்தின் பார்வையாளர்கள் அதிகரிப்பு!

'கான்க்ளேவ்' திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதைப் பற்றி...

News image

கான்க்ளேவ் திரைப்படத்தின் போஸ்டர்

Updated On :23 ஏப்ரல் 2025, 6:21 pm IST

போப் பிரான்சிஸ் மறைவால் ‘கான்க்ளேவ்’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது.

வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், ஏப். 21 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு வரும் ஏப்.26 அன்று புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்று பின்னர் அவரது உடல் புனித மேரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸின் மரணத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அடுத்த எழுந்துள்ளது.

முன்னதாக, கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை மிகவும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் மேற்கொள்ளப்படும் என்பது உலகம் அறிந்த ஒன்று. ஆனால், அந்த ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக உருவான ஒரு திரைப்படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

‘கான்க்ளேவ்’

கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரிய மரபுகளைப் பின்பற்றி போப் ஆண்டவரின் மரணத்திற்கு பிறகு அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை மையமாகக் கொண்டு ராபர்ட் ஹாரிஸ் என்பவர் எழுதிய நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘கான்க்ளேவ்’.

கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. இந்நிலையில், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியான இந்தப் படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது விண்ணைத் தொட்டுள்ளது.

போப் பிரான்சிஸின் மரணத்திற்கு முந்தைய நாள் (ஏப்.20) வரை 18 லட்சம் நிமிடங்கள் காணப்பட்டிருந்த இந்தப் படம் ஏப்.21 அன்று இரவுக்குள் சுமார் 69 லட்சம் நிமிடங்கள் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது போப்பின் மரணத்திற்கு பின்னர் சுமார் 283 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தி டூ போப்ஸ் திரைப்படத்தின் போஸ்டர்

தி டூ போப்ஸ் திரைப்படத்தின் போஸ்டர்

‘தி டூ போப்ஸ்’

இதேபோல், முன்னாள் வாடிகன் தலைவரான போப் பதினாறாம் பெனடிக்ட் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தி டூ போப்ஸ்’ எனும் திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை போப் பிரான்சிஸின் மறைவுக்கு பின்னர் சுமார் 417 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.