பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இந்திய எல்லையில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் சோதனை!

இந்திய எல்லையில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் சோதனை ஓட்டம் நடைபெற்றதைப் பற்றி...

News image

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Updated On :19 மார்ச் 2025, 9:17 pm IST

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் மாநில அரசின் சார்பில் அதிநவீன டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தார்ன் தரன் மாவட்டத்திலுள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாக டிரோன் செயல்பாடுகள் மற்றும் எல்லைகள் தாண்டி மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் அதிகமுள்ள பகுதியான சராய் அமானத் கான் பகுதியில் அதிநவீன டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 4 மற்றும் 5 ஆகிய நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து இன்று (மார்ச் 19) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில அரசின் அமைச்சர்கள் அமான் அரோரா மற்றும் லலிஜித் சிங் புல்லார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் டிரோன்களை அடையாளம் கண்டு, அதனை செயலிழக்கச் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியா பாகிஸ்தான் எல்லையைக் கடந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் தடுக்க முடியும் எனக் கூறப்படுகின்றது.

மேலும், மிகவும் சவாலான நிலைமைகளில் இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகின்றது எனபதை மதிப்பிடுவதற்காக அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கி இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில அமைச்சர் அமான் அரோரா கூறுகையில், சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை எல்லைப் பாதுகாப்புப் படையினருடையது என்றாலும் அவர்களது முயற்சிகளை நிறைவு செய்ய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.