கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

News image
Updated On :5 ஏப்ரல் 2025, 1:29 pm

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 42 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 42 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 40 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரைஸ் மரியூ 58 ரன்களும், டேரில் மிட்செல் 43 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அகிஃப் ஜாவத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ராப் மற்றும் சூஃபியான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஒவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அப்துல்லா சஃபீக் மற்றும் தையாப் தஹீர் தலா 33 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேக்கோப் டஃபி 2 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல், முகமது அப்பாஸ் மற்றும் டேரில் மிட்செல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.