உத்தரப் பிரதேசத்தின் மவூ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மவூவின் பிஜாரா பகுதியிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள சிறைவாசிகளில் 5 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த சிறையின் அதிகாரி ராஜேஷ் குமார் இன்று (மார்ச்.8) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அந்த சிறையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், பல்லியாவில் நடைபெற்ற திருவிழாவின்போது பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அனைவரும் தங்களது உடலில் பச்சைக் குத்திக்கொண்டதாகவும், ஒரே ஊசியை பயன்படுத்தியதால் இந்த தொற்று அவர்களுக்கு பரவியிருக்கக் கூடும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு சிறப்பு உணவும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
முன்னதாக, சுமார் 1,095 பேர் மவூ சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஏற்கனவே 9 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு
பயங்கரவாத தொடா்புகள் இருப்பதாக சந்தேகம்: உ.பி. நபரை கைது செய்த தில்லி காவல்துறை

காஞ்சிபுரத்தில் சிறைவாசிகள் எழுதிய புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம்

பத்தாம் வகுப்பு தோ்வு: 35 சிறைவாசிகள் எழுதினா்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


