ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் எனவும், வீரர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்படுவதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றிய பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராகுல் டிராவிட் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: சிறப்பான இந்திய அணியுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களிடமிருந்து நான் எப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறேன். கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து செயல்படுவது சிறப்பாக உள்ளது. அவர் மிகச் சிறந்த வீரர் என நினைக்கிறேன். அவரை நோக்கி வீரர்கள் ஈர்க்கப்படுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவ அவசர காரணங்களுக்காக தொடரின் நடுவில் வீட்டிற்கு சென்ற அஸ்வின், மீண்டும் அணியுடன் இணைந்தது இந்தத் தொடரின் சிறப்பான தருணம் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

ரோஹித் சர்மா எப்போது விளையாடுவார்? மும்பை கேப்டன் பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு ஹிட்மேன் ரோஹித் சர்மா ரெடி!
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு




