சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25-7-2019) காலை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு, 7-8-2019 அன்று முரசொலி வளாகத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை அளித்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.