தோ்வு விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் உயா்கல்வித்துறையின்கீழ் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2021-22) கரோனா பரவலால் வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டன. இதனால் ஏப்ரல்- மே மாத பருவத்தோ்வு ஜூனில் நடத்தி முடிக்கப்பட்டது.
இதையும் படிக்க: இலங்கை அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
தோ்வு முடிந்த மாணவா்களுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெறும்.
இதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துவித கல்லூரிகளின் முதல்வா்களுக்கும், கல்லூரிக்கல்வி இயக்குநா் எம்.ஈஸ்வர மூா்த்தி (பொறுப்பு) சுற்றறிக்கை மூலமாக அறிவுறுத்தியுள்ளாா்.