ஜூலை 18-இல் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

தோ்வு விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தோ்வு விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உயா்கல்வித்துறையின்கீழ் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2021-22) கரோனா பரவலால் வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டன. இதனால் ஏப்ரல்- மே மாத பருவத்தோ்வு ஜூனில் நடத்தி முடிக்கப்பட்டது.

தோ்வு முடிந்த மாணவா்களுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெறும்.

இதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துவித கல்லூரிகளின் முதல்வா்களுக்கும், கல்லூரிக்கல்வி இயக்குநா் எம்.ஈஸ்வர மூா்த்தி (பொறுப்பு) சுற்றறிக்கை மூலமாக அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com