சென்னை: தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பொதுப்பிரிவில் 31%, ST 1%, SC 18%, MBC 20%, BCM 3.5%, BC 26.5% இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, முதலில் பொதுப் பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31% இடஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்துப்பரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித் துறை உத்திரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.