எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கூத்தாநல்லூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா

திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:56 pm IST

கூத்தாநல்லூர்: திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைக்காப்பிற்கு, நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் அய்.வி.குமரேசன், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் எஸ்.வி. பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Story image

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, சேகரை, பாண்டுக்குடி, பண்டுதக்குடி , வடபாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் அனைத்து சமூகத்திலிருந்தும் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு, 5 வகையான சாதம், 18 வகையான சத்துப் பொருட்களுடன், வளையல் இட்டு, சமுதாய வளைக்காப்பை, திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தொடக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: சமுதாய வளைக்காப்பு கடமைக்கு செய்யப்படும் நிகழ்வு அல்ல. கர்ப்பிணிப் பெண்களின் பொருளாதாரக் கஷ்டங்களை அறிந்து, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கர்ப்பிணியானப் பெண்கள் எந்த அளவிற்கு, மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அது போலத்தான் வயிற்றில் வளரக் கூடிய குழந்தையும் இருக்கும். கர்ப்பிணித் தாய்மார்கள் ஆரோக்கியமான, அறிவுள்ள குழந்தையாக ஈன்றெடுக்க வேண்டும் என்றார்.

இவ்விழாவில், நகர மன்ற துணைத் தலைவர் மு.சுதர்ஸன், புள்ளமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் டீ. செல்வம், மாவட்டப் பிரதிநிதி கு.ரவிச்சந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, நகர மன்ற உறுப்பினர் துரைமுருகன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிர்வாகிகள் கவனித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.