கூத்தாநல்லூர்: திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைக்காப்பிற்கு, நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் அய்.வி.குமரேசன், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் எஸ்.வி. பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, சேகரை, பாண்டுக்குடி, பண்டுதக்குடி , வடபாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் அனைத்து சமூகத்திலிருந்தும் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு, 5 வகையான சாதம், 18 வகையான சத்துப் பொருட்களுடன், வளையல் இட்டு, சமுதாய வளைக்காப்பை, திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தொடக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: சமுதாய வளைக்காப்பு கடமைக்கு செய்யப்படும் நிகழ்வு அல்ல. கர்ப்பிணிப் பெண்களின் பொருளாதாரக் கஷ்டங்களை அறிந்து, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கர்ப்பிணியானப் பெண்கள் எந்த அளவிற்கு, மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அது போலத்தான் வயிற்றில் வளரக் கூடிய குழந்தையும் இருக்கும். கர்ப்பிணித் தாய்மார்கள் ஆரோக்கியமான, அறிவுள்ள குழந்தையாக ஈன்றெடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: கேரள பிஎஃப்ஐ பொதுச் செயலாளர் கைது
இவ்விழாவில், நகர மன்ற துணைத் தலைவர் மு.சுதர்ஸன், புள்ளமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் டீ. செல்வம், மாவட்டப் பிரதிநிதி கு.ரவிச்சந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, நகர மன்ற உறுப்பினர் துரைமுருகன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நிர்வாகிகள் கவனித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

நீட் மறுதேர்வு வினாத்தாள் கடினமாக இருக்குமா? எல்லாம் ஊகங்கள்தான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



