சென்னையில் முறையான வடிகால் பணிகள் செய்யவில்லை என்று அரசின் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாள்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. மழை குறைந்ததால் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “அதிமுக ஆட்சியில் பருவமழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனால் வானிலை மையம் முன்பே அறிவித்திருந்தும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
திமுக ஆட்சியில் நேற்றுதான் (டிச.4) மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ரூ.4,000 கோடிக்கு வடிகால் பணிகள் நடந்ததாக அமைச்சர்கள் கூறினாலும், மக்களுக்கு ஒன்றும் போய்ச் சேரவில்லை. அரசின் திட்டமிடப்படாத பணிகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மழை நின்றபின்பும் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை எப்போது மோட்டார் வாங்கி வெளியேற்றுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


