27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரூ.4,000 கோடியால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னையில் முறையான வடிகால் பணிகள் செய்யவில்லை என்று அரசின் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :5 டிசம்பர் 2023, 8:14 pm IST

சென்னையில் முறையான வடிகால் பணிகள் செய்யவில்லை என்று அரசின் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாள்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. மழை குறைந்ததால் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “அதிமுக ஆட்சியில் பருவமழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனால் வானிலை மையம் முன்பே அறிவித்திருந்தும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் நேற்றுதான் (டிச.4) மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ரூ.4,000 கோடிக்கு வடிகால் பணிகள் நடந்ததாக அமைச்சர்கள் கூறினாலும், மக்களுக்கு ஒன்றும் போய்ச் சேரவில்லை. அரசின் திட்டமிடப்படாத பணிகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.” என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், “மழை நின்றபின்பும் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை எப்போது மோட்டார் வாங்கி வெளியேற்றுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.