தம்மம்பட்டி அருகே மின்கம்பி மிதித்து தொழிலாளி பலி

தம்மம்பட்டி அருகே மின்கம்பி மிதித்து தொழிலாளி ஒருவர் பலியானார்.
தம்மம்பட்டி அருகே மின்கம்பி மிதித்து தொழிலாளி பலி
Updated on
1 min read

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே மின்கம்பி மிதித்து தொழிலாளி ஒருவர் பலியானார்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் புதிதாக கட்டப்படும் கோயில் அருகே மின்கம்பியை மிதித்த தொழிலாளி ஒருவர்  பலியானார்.

ஆத்தூர் அருகே கோபாலபுரம், சத்யா நகரில் வசிப்பவர் வரதராஜ் (55), கொத்தனார். இவர், செந்தாரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மாரியம்மன் கோயிலில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், அருகில் கிடந்த மின்கம்பியை வரதராஜ் மிதித்ததால் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக தம்மம்பட்டி காவல் உதவி ஆய்வாளர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com