இலுப்பூரில் மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி!

இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
இலுப்பூரில் மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி!
Published on
Updated on
1 min read

இலுப்பூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று(அக். 5) இரவு, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில் அமமுக இலுப்பூர் நகரச் செயலர் வீட்டில் வளர்க்கப்பட்ட 7 ஆடுகள் உயிரிழந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அடுத்துள்ள ராப்பூசலை சேரந்தவர் அமமுக இலுப்பூர் நகர செயலரான விவசாயி பாஸ்கர். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர், வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இவர் வளர்த்து வந்த ஆடுகளை வழக்கம் போல நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டின் அருகே உள்ள ஆட்டுக் கிடயில் அடைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு ராப்பூசல் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது ஆடுகள் மீது இடி தாக்கியதில், கிடயில் இருந்த 8 ஆடுகளில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை, கால்நடை மற்றும் வருவாய்த் துறையினர் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com