இலுப்பூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று(அக். 5) இரவு, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில் அமமுக இலுப்பூர் நகரச் செயலர் வீட்டில் வளர்க்கப்பட்ட 7 ஆடுகள் உயிரிழந்தன.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அடுத்துள்ள ராப்பூசலை சேரந்தவர் அமமுக இலுப்பூர் நகர செயலரான விவசாயி பாஸ்கர். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர், வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இவர் வளர்த்து வந்த ஆடுகளை வழக்கம் போல நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டின் அருகே உள்ள ஆட்டுக் கிடயில் அடைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு ராப்பூசல் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது ஆடுகள் மீது இடி தாக்கியதில், கிடயில் இருந்த 8 ஆடுகளில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை, கால்நடை மற்றும் வருவாய்த் துறையினர் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஹரியாணாவில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: 67% வாக்குப் பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடலூரில் இடி தாக்கி தென்னை மரம் சேதம்

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


