ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :16 ஜனவரி 2024, 11:07 am IST

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பது வழக்கம்.

இதையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பாதுகாப்பு கட்டமைப்புகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை சமன் செய்தல், வாடிவாசல், மேடை, முக்கிய விருந்தினா்கள் மாடம், பாா்வையாளா்கள் மாடம் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி மாடுபிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது.  இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

இப்போட்டியில் பங்கேற்க 1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.