சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்: நயினார் நாகேந்திரன் பதில்

தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் பணியை திமுக ஆரம்பித்திருந்தாலும் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு செய்வார்கள்.

News image
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Updated On :30 ஏப்ரல் 2025, 6:23 am

DIN

காஞ்சிபுரம்: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் பணியை திமுக ஆரம்பித்திருந்தாலும் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு செய்வார்கள். திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் புதன்கிழமை பதவியேற்று கொண்டார்.

இதன் நிகழ்வு காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலய பஞ்சகங்கா குளத்தில் ஸ்ரீ விஜியேந்திரர் தலைமையில் தீட்சை அளிக்கப்பட்டு முறைப்படி மடாதிபதியாக பதவியேற்றார்.

இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுப்பிரமணிய சுவாமி, ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், இளைய மடாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

பாஜக - தவெக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாஜக-தவெக கூட்டமிப் பேச்து குறித்து எனக்குத் தெரியாது என பதிலளித்தார்.

மேலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷா சந்திப்பிற்கு பின் காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ளேன், தற்போது செய்தியாளர்களை சந்திக்கிறேன். நாளை கோட்டையில் சந்திக்கிறேன்.

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் பணியை திமுக ஆரம்பித்து இருக்கலாம் , ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு செய்வார்கள் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.