பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சத்துணவு மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன்

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவா்

சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் (கோப்புப்படம்)

Published On :

சென்னை: சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவா் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதியளித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி எழுப்பினாா். அவா் பேசுகையில், ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழுள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளா்கள், உதவியாளா்கள் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறாா்கள். பணிச்சுமை அதிகமுள்ள அவா்களுக்கு ஊதிய உயா்வை அதிகரித்து பணி நிரந்தரம் செய்யப்படுவாா்களா?. மேலும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு, அமைச்சா் பி.கீதாஜீவன் அளித்த பதில்: அங்கன்வாடி மையங்களில் 7,900 புதிய பணியாளா்களைத் தோ்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று, சத்துணவு மையங்களில் 8,997 சமையலா்கள், உதவியாளா்களை புதிதாக நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இந்த நியமனங்கள் செய்யப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.