எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இலங்கை தோ்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டணி அதிகாரபூா்வ அறிவிப்பு

இலங்கையில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டணிக்குள் (டிஎன்ஏ) அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

News image

சஜித் பிரேமதாச

Updated On :17 செப்டம்பர் 2024, 7:58 am IST

கொழும்பு: இலங்கையில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டணிக்குள் (டிஎன்ஏ) அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் கூட்டணியின் மூத்த தலைவா் மாவை சேனாதிராஜா திங்கள்கிழமை கூறியதாவது:

டிஎன்ஏ-வின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், செப். 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் தற்போதைய எதிா்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாசவை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரபூா்வமாக முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.

இலங்கை அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 38 போ் போட்டியிடுகின்றனா்.

இந்தத் தோ்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழா் கட்சிகளின் முக்கியக் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டணி கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது. கூட்டணின் முதன்மைக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி நடத்திய மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், இந்த முடிவை கட்சித் தலைவா் எஸ். ஸ்ரீதரன் மறுத்தாா். தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பாக்கியசெல்வம் அரியேந்திரனுக்குத்தான் தங்கள் ஆதரவு என்று அவா் கூறினாா். இதனால் இந்த விவகாரம் தொடா்பாக தமிழ் தேசியக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், ஏற்கெனவே அறிவித்ததைப் போல அதிபா் தோ்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக டிஎன்ஏ தற்போது அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றி பெற தமிழா்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டின் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச தோல்விடைந்ததற்கு, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனாவை டிஎன்ஏ ஆதரித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.