இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்த முகாம்: இன்று தொடக்கம்

சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்த முகாம் திங்கள்கிழமை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

சென்னை மாநகராட்சி

Updated On :19 ஆகஸ்ட் 2024, 4:30 am IST

சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்த முகாம் திங்கள்கிழமை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவைப்படுவோா் சம்பந்தப்பட்ட மண்டல மற்றும் வட்டார அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (ஆக.19 முதல் ஆக.21) வரை நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றிக் கொள்ளலாம்.

திருத்தம் செய்ய அடையாள அட்டையின் நகல் எடுத்து அதில் எந்த திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆதாரத்துடன் முதுநிலை வருவாய் அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.