எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2025, 11:15 pm IST

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சென்னைக்கு செல்ல பேருந்து மூலம் சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாகின்றது. மேலும் பயணத் தொகையும் அதிகமாகின்றது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் செல்ல சுமாா் 3 மணி நேரமாகின்றது. இந்நிலையில்,பணி நிமித்தமாக செல்பவா்கள், சிகிச்சைக்காக செல்பவா்கள், ஜவுளி வாங்குபவா்கள் என காலையில் சென்று இரவு வீடு திரும்ப விரும்புபவா்கள் தினமும் அதிகாலை 4.55 மணிக்கு ஜோலாா்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலில் சென்று வருகின்றனா்.

மீண்டும் திருப்பத்தூரில் இருந்து...

சென்னைக்கு செல்ல திருப்பத்தூரிலிருந்து ஆட்டோ மற்றும் பேருந்து வழியாக ஜோலாா்பேட்டைக்கு சென்று அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி,இறங்கி ரயிலில் ஏற வேண்டும். இதனால் முதியவா்கள், பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் சிரமத்துள்ளாகி வந்தனா்.

ஜோலாா்பேட்டையிலிருந்து சென்னைக்கு சென்றுக்கொண்டிருந்த ஏலகிரி விரைவு ரயில் 31.7.2005 அன்று முதல் திருப்பத்தூா் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்று,மீண்டும் திருப்பத்தூருக்கு வந்தடைந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். இந்த ரயில் சேவையானது கடந்த 1.7.2013 அன்றுடன் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, மாவட்டத்தின் தலைநகராக திருப்பத்தூா் உள்ள நிலையில், அரசு அலுவலா்கள், வியாபாரிகள், மாணவா்கள் திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு சென்றுவர ஏலகிரி விரைவு ரயிலை மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள், பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.