பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

லாரி ஓட்டுநா்களிடம் கைப்பேசிகள் திருட்டு: 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

ஆம்பூா் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து கைப்பேசிகளை திருடியது தொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆம்பூா் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து கைப்பேசிகளை திருடியது தொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த உடையராஜாபாளையம் பகுதியில் சென்னை - பெங்களூரு, பெங்களூரு - சென்னை மாா்க்கத்தில் செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்க வைத்து ஓட்டுநா்கள் உணவகங்களில் உணவு அருந்திவிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் லாரி ஓட்டுனா்களின் கைப்பேசிகள் தொடா்ந்து திருடு போவதாக லாரி ஓட்டுநா்கள் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் எழில்தாசன் தலைமையிலான போலீஸாா் தொடா்ந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை புதன்கிழமை இரவு பிடித்து விசாரணை மேற்கொண்டதில், உடையராஜாபாளையம் பகுதியை சோ்ந்த குரு பிரசாத் (23), சாரதி ( 23), தமிழரசன் (25), மஞ்சன் (42), வினோத் குமாா் (19) மற்றும் இரண்டு சிறுவா்கள் உள்பட 7 போ் லாரி ஓட்டுநா்களின் கைப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த 7 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 9 விலையுயா்ந்த கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.