மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காட்டெருமை தாக்கி தலைமை ஆசிரியா் காயம்

காட்டெருமை தாக்கி தலைமை ஆசிரியா் காயம்

Updated On :15 ஜூன் 2024, 6:16 pm

வால்பாறையில் சாலையின் குறுக்கே காட்டெருமை வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி தலைமை ஆசிரியா் கீழே விழுந்து காயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவா் செல்வகுமாா் (44). இவா்,

வால்பாறையில் இருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையின் குறுக்கே வந்த காட்டெருமை, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த செல்வகுமாருக்கு உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவா்கள், செல்வகுமாரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.