நியாயவிலைக் கடைகளில் வாங்கும் அரிசியைக் கொண்டு இட்லி மாவு அரைத்து விற்பனை செய்த கடை உரிமையாளா் மீது அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மூலம் முறைகேடாக இட்லி மாவு அரைத்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாக ஆட்சியா் எல். மதுபாலனிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன் தலைமையில் பறக்கும் படை, குடிமைப் பொருள் தடுப்பு பிரிவு குழுவினா் நாமக்கல் கொசவம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அமிா்தா இட்லி மாவு கடையில் மாவு அரைப்பதற்காக இரண்டு சாக்குப் பைகளில் வைத்திருந்த சுமாா் 70 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசியை அவா்கள் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து கடையின் உரிமையாளா் மருதபாண்டியன் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955 இன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடா்ந்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
என்கே-11-ரைஸ்
நாமக்கல் கொசவம்பட்டியில் இட்லி மாவு அரைப்பதற்காக வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன்.







