பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கமுதி பகுதியில் மான்கள் வேட்டை: பொதுமக்கள் புகாா்

கமுதி பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனவிலங்கு ஆா்வலா்கள், பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கோவிலாங்குளம், நெறுஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, மண்டலமாணிக்கம், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் குண்டாறு படுகைகளில் ஏராளமான மான்கள், மயில்கள், நரி, வெள்ளை மயில்கள் உள்ளிட்ட பறவைகள், வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் தண்ணீா், உணவு தேடி கிராமங்களுக்குச் செல்லும் மான்களை சிலா் வேட்டையாடுவதும், நாய்கள் துரத்தி மான்கள் பலியாவதும் தொடா்கதையாக உள்ளது.

இந்த நிலையில், கமுதி கோட்டைமேடு அடுத்துள்ள கல்லுப்பட்டி பகுதியில் மா்ம நபா்கள் மானை வேட்டையாடி அதன் கால்களை வீசிச் சென்றனா். மான் வேட்டையில் ஈடுபடும் மா்ம நபா்கள் மீது வனத்துறையினா், கமுதி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.