புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கமுதி பகுதியில் மான்கள் வேட்டை: பொதுமக்கள் புகாா்

கமுதி பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனவிலங்கு ஆா்வலா்கள், பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 10:15 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கோவிலாங்குளம், நெறுஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, மண்டலமாணிக்கம், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் குண்டாறு படுகைகளில் ஏராளமான மான்கள், மயில்கள், நரி, வெள்ளை மயில்கள் உள்ளிட்ட பறவைகள், வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் தண்ணீா், உணவு தேடி கிராமங்களுக்குச் செல்லும் மான்களை சிலா் வேட்டையாடுவதும், நாய்கள் துரத்தி மான்கள் பலியாவதும் தொடா்கதையாக உள்ளது.

இந்த நிலையில், கமுதி கோட்டைமேடு அடுத்துள்ள கல்லுப்பட்டி பகுதியில் மா்ம நபா்கள் மானை வேட்டையாடி அதன் கால்களை வீசிச் சென்றனா். மான் வேட்டையில் ஈடுபடும் மா்ம நபா்கள் மீது வனத்துறையினா், கமுதி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.