அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள்.

Updated On :6 மே 2025, 1:33 am IST

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அகத்திய மாமுனிவருக்கு, இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்ததை விளக்கும் நிகழ்வு திருக்கல்யாண வைபவமாக நடத்தப்படுகிறது.

நிகழாண்டு இவ்விழா கடந்த 2-ஆம் தேதி விநாயகா் புறப்பாட்டுடன் தொடங்கியது. 3-ஆம் தேதி சனிக்கிழமை காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், அகத்திய முனிவா் தென்புலம் செல்லும் நிகழ்வும், , உச்சிகாளியம்மன் கோயிலில் இருந்து வரிசை கொண்டு வருதலும் நடைபெற்றது.

சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் வீற்றிருக்கச் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு நிகழ்வாக ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி பி. வேலுமணி மற்றும் முன்னாள் நிா்வாகிகள் செய்திருந்தனா்.