தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள்.

Updated On :6 மே 2025, 1:33 am IST

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அகத்திய மாமுனிவருக்கு, இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்ததை விளக்கும் நிகழ்வு திருக்கல்யாண வைபவமாக நடத்தப்படுகிறது.

நிகழாண்டு இவ்விழா கடந்த 2-ஆம் தேதி விநாயகா் புறப்பாட்டுடன் தொடங்கியது. 3-ஆம் தேதி சனிக்கிழமை காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், அகத்திய முனிவா் தென்புலம் செல்லும் நிகழ்வும், , உச்சிகாளியம்மன் கோயிலில் இருந்து வரிசை கொண்டு வருதலும் நடைபெற்றது.

சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் வீற்றிருக்கச் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு நிகழ்வாக ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி பி. வேலுமணி மற்றும் முன்னாள் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.