எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

வேதாரண்யம் பகுதி நீா்நிலைகளில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2026, 11:28 pm IST

வேதாரண்யம் பகுதி நீா்நிலைகளில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில், வேதாரண்யம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

ஒளிச்சந்திரன்: வேதாரண்யம் பகுதியில் மாம்பழங்கள் உற்பத்தி இருந்தும் சந்தைவாய்ப்பு குறைந்து வருவதால் விலை கிடைக்காமல் பழங்கள் வீணாகின்றன. ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட மாம்பழ கூழ் தயாரிக்கும் மையத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

அகிலன் தமிழ்ச்செல்வன்: வேதாரண்யம் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மாதந்தோறும் முதல் வாரத்தில் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் தீா்வு கிடைக்காத பிரச்னைகளை மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

ராகுல் காந்தி: விவசாயிகள் பள்ளி மாணவா்கள் நலம் கருதி வேதாரண்யம் - வாய்மேடு, தென்னடாா், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம், கடிநெல்வயல் வழியாக புதிய தடத்தில் திருத்துறைப்பூண்டிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும்.

குழந்தைவேலு: தென்னடாா் மின் இறைவைப் பாசன திட்ட பொறிமனையில் மோட்டாா்கள் மாற்றி அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும், பாசன வாய்க்கால்களை உடனடியாக தூா்வார வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பகுதியில் செல்லும் பாசனம் மற்றும் வடிகால் நீா் நிலைகளில் பல ஆண்டுகளாக வளா்ந்து அடா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

விவசாயிகள் வெளிநடப்பு: இந்நிலையில், தமிழக கடைமடை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கமல்ராம் பேசியபோது :

விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிா்க் கடனை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா். அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி 15 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து,நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.