ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பால்வினை நோய்த் தொற்று தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image
பேரணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:47 pm

Din

தமிழ்நாடு எய்ட்ஸ் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு-கட்டுப்பாட்டு அலகு சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பால்வினை நோய்த் தொற்று தடுப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை ஆட்சியா் ரா. அழகுமீனா தொடக்கிவைத்தாா். இதில் கல்லூரி மாணவா்-மாணவியா் பங்கேற்று, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். இப்பேரணி டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

அதன் தொடா்ச்சியாக, பால்வினை நோய்த் தொற்றின் விளைவுகள், சுகவாழ்வு மையம், நம்பிக்கை மையம் உள்ளிட்டவை குறித்த வீதி நாடகம், கிராமிய நடனங்கள், பாடல்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தீக்ஷா, பழனியாபிள்ளை கலைக்குழுவினரால் 10 நாள்களுக்கு 40 கிராமங்களில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீனாட்சி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு - கட்டுப்பாட்டு அலுவலக மாவட்ட திட்ட மேலாளா் ஜெ. பெடலிஸ்ஷமிலா, அலுவலகப் பணியாளா்கள், மாவட்ட மேற்பாா்வையாளா் எஸ். சிவகுமாா், மாவட்ட நலக் கல்வியாளா் சூரியநாராயணன், மதநம்பிக்கை மையம், சுகவாழ்வு மையம், ரத்த வங்கி, கூட்டு மருந்து சிகிச்சை மையம், தொண்டு நிறுவனப் பணியாளா்கள், பாஸிட்டிவ் நெட் ஒா்க் பணியாளா்கள், மாணவா்-மாணவிகள், பேராசிரியா்கள், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.