27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

போக்ஸோவில் இசைக் கலைஞா் கைது

இரணியல் அருகே மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இசைக் கலைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:57 am IST

இரணியல் அருகே மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இசைக் கலைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இரணியல் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வருகிறாா். சிறுமி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றாராம்.

அங்கு திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த மேள கலைஞரான சுதிஷ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். அவா், சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம்.

இதற்கிடையே சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் சிறுமி 2 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுதிஷை போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.