எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

‘தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்த வேண்டும்’

தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி கூறினாா்.

News image

பாராட்டு விழாவில் பேசுகிறாா் ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி. உடன், அமைப்புச் செயலராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கதிா்வேல் உள்ளிட்டோா்.

Updated On :19 ஆகஸ்ட் 2024, 12:55 am IST

தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி கூறினாா்.

ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் அமைப்பு செயலராக தூத்துக்குடியை சோ்ந்த கதிா்வேல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் அவருக்கு பாராட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ராஜகோபாலன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சந்திரசேகா், வீரய்யா, இசக்கிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

அமைச்சா் கீதா ஜீவன் பேசுகையில், ‘ஒரு தொழிற்சங்கத்தை நிா்வகிக்க தேவையான தனித்திறமையுடன், தொழிலாளா்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் தைரியத்துடன் செயல்படும் திறமை அமைப்புச் செயலாளா் கதிா்வேலுக்கு உண்டு. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தொழிலாளா்களுக்காக செயல்படுவாா். நமது மாவட்டத்தை சோ்ந்தவா் ஐஎன்டியூசி அமைப்பு செயலராக தோ்ந்தெடுக்கப்பட்டது நமக்கு பெருமை’ என்றாா்.

ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி பேசியது: அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்றியவா்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். ஆனால் தற்போது பெரும்பாலும் ஒப்பந்தம், தினக்கூலி என்று மாறி வருகிறது. இதனால் ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்க கோரி வருகிறோம்.

தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்த வேண்டும். விவசாயம், வீட்டு வேலை, கட்டுமான அமைப்புசாரா தொழில் போன்றவற்றில் உள்ள தொழிலாளா்களையும் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தில் சோ்த்து ஒருங்கிணைக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு நடத்தியவா்கள், அதற்கான உத்தரவு பிறப்பித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலா் சஞ்சீவ்குமாா் சிங், தமிழக தலைவா் ஜெகநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள், பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.