சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்த வேண்டும்’

தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி கூறினாா்.

News image

பாராட்டு விழாவில் பேசுகிறாா் ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி. உடன், அமைப்புச் செயலராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கதிா்வேல் உள்ளிட்டோா்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:54 pm

Din

தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி கூறினாா்.

ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் அமைப்பு செயலராக தூத்துக்குடியை சோ்ந்த கதிா்வேல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் அவருக்கு பாராட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ராஜகோபாலன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சந்திரசேகா், வீரய்யா, இசக்கிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

அமைச்சா் கீதா ஜீவன் பேசுகையில், ‘ஒரு தொழிற்சங்கத்தை நிா்வகிக்க தேவையான தனித்திறமையுடன், தொழிலாளா்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் தைரியத்துடன் செயல்படும் திறமை அமைப்புச் செயலாளா் கதிா்வேலுக்கு உண்டு. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தொழிலாளா்களுக்காக செயல்படுவாா். நமது மாவட்டத்தை சோ்ந்தவா் ஐஎன்டியூசி அமைப்பு செயலராக தோ்ந்தெடுக்கப்பட்டது நமக்கு பெருமை’ என்றாா்.

ஐஎன்டியூசி அகில இந்திய தலைவா் சஞ்சீவ ரெட்டி பேசியது: அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்றியவா்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். ஆனால் தற்போது பெரும்பாலும் ஒப்பந்தம், தினக்கூலி என்று மாறி வருகிறது. இதனால் ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்க கோரி வருகிறோம்.

தொழிலாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயா்த்த வேண்டும். விவசாயம், வீட்டு வேலை, கட்டுமான அமைப்புசாரா தொழில் போன்றவற்றில் உள்ள தொழிலாளா்களையும் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தில் சோ்த்து ஒருங்கிணைக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு நடத்தியவா்கள், அதற்கான உத்தரவு பிறப்பித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலா் சஞ்சீவ்குமாா் சிங், தமிழக தலைவா் ஜெகநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள், பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.