தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஆத்தூரில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:59 am IST

ஆத்தூா் பேரூராட்சியில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே. கமால்தீன் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கேசவன், பாலசிங், அசோக்குமாா், பிச்சிமுத்து(எ) சிவா, முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் இந்த நிகழ்வில் வட்டார ஐசிடிசி ஆற்றுநா் அமராவதி, ஆய்வக நிபுணா் சண்முகசுந்தரம், சுகாதார ஆய்வாளா்கள் சுபாஷ், ஹரி ராமச்சந்திரன் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலகப் பணியாளா்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா், மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு இணைந்து ஆத்தூா் பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.