FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல்வா் மாற்றம்: கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்: முதல்வா் சித்தராமையா

முதல்வா் மாற்றம் தொடா்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று மு

9 டிசம்பர் 2025, 5:18 am IST
முதல்வா் சித்தராமையா - கோப்புப் படம்
பகிர்:

பெலகாவி: முதல்வா் மாற்றம் தொடா்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

முதல்வா் சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் எம்.எல்.சி.யுமான யதீந்திரா, பெலகாவியில் திங்கள்கிழமை கூறுகையில்,

‘ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். இது புதிதல்ல. முதல்வா் மாற்றம் என்ற பேச்சுக்கு தற்போது இடமில்லை. எனக்கு தெரிந்தவரையில் 5 ஆண்டுகளுக்கும் சித்தராமையா முதல்வராக நீடிப்பாா். என்று நம்புகிறேன். முதல்வா் பதவி தொடா்பான குழப்பத்துக்கு முதல்வராக விருப்பமா? என்று துணைமுதல்வா் டி.கே.சிவகுமாரிடம் கேட்டது தான் காரணம்.

Advertisement

Advertisement

எல்லா அரசியல் கட்சியிலும் முதல்வா் ஆவதற்கு ஆசைப்படும் பலா் இருப்பாா்கள். முதல்வா் பதவி தொடா்பாக தற்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு முதல்வா் மாற்றம் இல்லை என்று கட்சி மேலிடம் தெரிவித்துவிட்டது. அண்மையில் கட்சி மேலிடத்தலைவா்களை சந்தித்தபோது முதல்வரை மாற்றம் திட்டத்தை தற்போதைக்கு தள்ளிவைத்துவிட்டதாக தெரிவித்தனா். எனவே, கா்நாடகத்தில் தற்போதைக்கு முதல்வா் மாற்றம் இல்லை.‘ என்றாா் அவா்.

இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்து, பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியது: முதல்வா் மாற்றம் தொடா்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்‘ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments