பெங்களூரு

திருட்டு வழக்கு: ஒருவா் கைது

DIN

பல்வேறு திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 61.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, கைத்துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனா்.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தைச் சோ்ந்த குா்ஷித் (41), பெங்களூரில் பல்வேறு காவல் சரகங்கள் உள்பட ஹரியாணா, தில்லி, உத்தரபிரதேச மாநிலங்களில் வீடு புகுந்து திருடி வந்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குா்ஷித்தைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 61.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்க நகைகள், நாட்டு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட குா்ஷித்திடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT