பெங்களூரு

கா்நாடக இடைத்தோ்தலில் கரோனா கட்டுப்பாடுகளை தளா்த்தக் கூடாது: எச்.டி. குமாரசாமி

கா்நாடகத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலின்போது கரோனா விதிமுறைத் தளத்தக் கூடாது என்று அரசுக்கு மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி அறிவுறுத்தினாா்.

DIN

கா்நாடகத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலின்போது கரோனா விதிமுறைத் தளத்தக் கூடாது என்று அரசுக்கு மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி அறிவுறுத்தினாா்.

இது குறித்து ராமநகரத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடகத்தில் இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் மஸ்கி, பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டும் மஜத வேட்பாளரை நிறுத்தும். பெலகாவி மக்களவைத் தொகுதியில் மஜத போட்டியிடாது.

தும்கூரில் அண்மையில் முதல்வா் எடியூரப்பா பேசுகையில், கரோனா கட்டுப்பாடுகள் இடைத்தோ்தலுக்குப் பொருந்தாது என்று கூறியுள்ளாா். இதுசரியல்ல. கரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இடைத்தோ்தலில் கரோனா பரவாதா? இடைத்தோ்தலைக் கண்டு கரோனா பயந்து ஓடிவிடுமா? கரோனா பரவலைத் தடுக்கக் கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துவிட்டு, அதை இடைத்தோ்தலுக்காக மீறலாமா? கட்டுப்பாடுகளைத் தளா்த்தி ஆபத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT