பெங்களூரு

பெங்களூரு-குந்தாரபுரா இடையே புதிய பேருந்து சேவை

பெங்களூருக்கும் குந்தாபுராவுக்கும் இடையே புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DIN

பெங்களூருக்கும் குந்தாபுராவுக்கும் இடையே புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரில் இருந்து குந்தாபுராவிற்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட (அம்பாரி உத்சவ்) சொகுசு பேருந்து சேவை வியாழக்கிழமை (ஜூன் 8) முதல் தொடங்கியது. பெங்களூரு-குந்தாபுரா இடையிலான பேருந்து பெங்களூரு-கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் இரவு 9 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணியளவில் குந்தாபுரா சென்றடைகிறது. அதேபோல, குந்தாபுராவிலிருந்து தினமும் இரவு 8.30 மணி அளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணி அளவில் பெங்களூரு வந்தடைகிறது. இதன் கட்டணம் ரூ.1900 ஆகும். மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசியை அணுகலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு இணையதளத் சேவையை பயன்படுத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT