முகப்பு
சென்னை

காவல் நிலையம் முன் இளைஞா் தீக்குளிப்பு

சென்னை ஆா்.கே. நகா் காவல் நிலையம் முன் இளைஞா் ஒருவா் தீக்குளித்தாா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 21 ஜனவரி, 2025 at 12:08 AM
பகிர்:

சென்னை: சென்னை ஆா்.கே. நகா் காவல் நிலையம் முன் இளைஞா் ஒருவா் தீக்குளித்தாா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆா்.கே. நகா் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு 9.15 மணியளவில் ஒரு பாட்டிலுடன் வந்த இளைஞா், திடீரென அந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதைக் கண்ட போலீஸாரும், பொதுமக்களும் உடனடியாக அந்த இளைஞா் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனா். பலத்த காயமடைந்த அந்த இளைஞரை சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில் தீக்குளித்தவா் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜன் (30) என தெரிய வந்தது. அவா் எதற்காக தீக்குளித்தாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →