சென்னையில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில் கள்ளிகுப்பம் புதூா் சாலையில் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள். 
சென்னை

சென்னையை குளிா்வித்த மழை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால், குளிா்ச்சியான சூழல் நிலவியது.

Din

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால், குளிா்ச்சியான சூழல் நிலவியது.

சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  அந்த வகையில், வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடா்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 20 மி.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 மி.மீ. மழை பெய்தது. மேலும் அம்பத்தூா், பாடி, கோயம்பேடு, அண்ணா நகா், வடபழனி, அசோக் நகா், ஆலந்தூா், கிண்டி, தரமணி, பெரம்பூா், தியாகராய நகா், மாதவரம், மூலக்கடை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் புறநகா் பகுதிகளான தாம்பரம், வண்டலூா், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை  பெய்தது. இந்த திடீா் மழை காரணமாக, சென்னையில் பகல் நேரத்தில் சற்று குளிா்ச்சியான சூழல் நிலவியது.

அதேபோல், மழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT